‘ஒரு பெரிய சக்தியாக மாறும்’
உலகின் சமத்துவமின்மையை இன்னும் தெளிவுபடுத்த கோவிட் கொள்ளைநோயால் முடிந்தது என்று அறிஞர் நோம் சாம்ஸ்கி கூறினார்.
“அமெரிக்காவில் சமத்துவமின்மை மிகத் தெளிவாகி உள்ளது. அங்குள்ள இனவெறி மீண்டும் ஒரு முறை அம்பலமானது. தாராளமயமாக்கலின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 0.1 சதவிகிதத்தினர் 20 சதவிகிதம் செல்வத்தை கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கப் படையெடுப்பில் சிதைந்துபோன வியட்நாம், இந்த கொள்ளைநோயை சிறப்பான முறையில் நிலையில் எதிர் கொண்டுள்ளது. வியட்நாமில் ஒரு மரணம்கூட நிகழவில்லை. தென் கொரியாவும் கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தியது. அங்கு ஊரடங்குகூட தேவைப்படவில்லை. தைவானும் ஹாங்காங்கும் கோவிட்டை அடக்கி வைத்துள்ளன. நியூசிலாந்து கோவிட்டை துடைத்தெறிந்தது. ஆனால் அமெரிக்காவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில், மருத்துவமனைகள் என்றால் அவை வெறும் வணிகமாகும். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் பொருளாதார தாக்குதலுக்கு இரையான கியூபாவின் மருத்துவர்கள் இத்தாலிக்கு சென்றனர். வேறு பல நாடுகளுக்கும் சென்றனர். இதைக் கண்டதும் தாராளமய பத்திரிகைகள் என்ன கூறின? அந்த சர்வாதிகார கியூபா தங்கள் மருத்துவர்களை மற்ற நாடுகளுக்குள் திணிக்கிறது என்று. .
அமெரிக்கா போன்ற நாடுகள் கோவிட் கொள்ளைநோயின் முடிவில் மக்களை அதிக சர்வாதிகாரங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கின்றன. ஆனால் இதை எதிர்கொள்ள உலகம் முழுவதும் இயக்கங்கள் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்தால் ஒரு பெரிய சக்தியாக மாறும்” என்று சாம்ஸ்கி கூறினார்.
திருவனந்தபுரம், ஜுன் 27- கோவிட்-19 கொள்ளை நோயை எதிர்கொள்வ தில் கேரளத்தின் முன்மாதிரிகள் குறித்த உலக ளாவிய உரையாடல் வெள்ளியன்று தொ டங்கியது. அதில், உலகின் சமத்துவமின்மையை கோவிட் தெளிவாக்கி விட்டதாக பொருளாதார அறிஞர் நோம் சாம்ஸ்கி கூறினார். ஒரு புதிய உலகத்திற்காக நாம் மாற வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ‘கோவிட் -19 கொள்ளைநோயின் பின்னணி யில் புதிய யோசனைகள் மற்றும் மேம்பாட்டு முன்னுதாரணங்கள்’ குறித்த தொடர் ஆன் லைன் உரையாடல் நிகழச்சியை புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்கள் நோம் சாம்ஸ்கி, அமர்த்தியா சென் ஆகியோர் துவக்கியுள்ளனர். இதில் விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், ராஜீய நிபு ணர்கள், பொருளாதார வல்லுநர்கள், எழுத்தா ளர்கள், பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நர்கள் உட்பட உலகளவில் திறன்மிகு செயற் பாட்டாளர்கள் நபர்கள் பங்கேற்க உள்ளனர். வெள்ளியன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘கேரள உரையாடல்’ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கோவிட் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் மறுபரி சீலனை செய்ய வழிவகுத்தது என்றார்.
“புதிய உலகத்திற்கு ஏற்றவாறு நாம் மாற வேண்டும். சமுதாயத்தை ஒழுங்கமைப்பதற்கான முன்னுரிமைகள் மற்றும் வழிகள் மாற வேண்டும். நம்மிடம் உள்ள பொதுவான அறிவு பயனற்றதாக இருக்கலாம். புதியதாக சிலவற்று டன் பொருந்திச் செல்ல அதிக அறிவு தேவைப்பட லாம். இது அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டி யதல்ல. சமூகம் முழுவதும் பரவலான விவாதம் நடக்க வேண்டும். மக்கள் பங்கேற்புடன்கூடிய திட்டமிடலே கேரளாவின் பலம். அதிகார பரவ லாக்கலில் நாங்கள் முன்னேறியுள்ளோம். இத்தகைய பின்னணியில், கோவிட்டுக்கு எதி ரான போராட்டத்தில் கணிசமான வேகத்தைப் பெற முடிந்தது. ஆனால், சமூக, பொருளாதார நிலை கோவிட் கொள்ளை நோயின் பின்னணி யில் மேலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது என்றார்.
சந்தேகத்திற்குரிய ஊரடங்கு: அமர்த்தியா சென்
இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட விதம் கேள்விக்குரியது என்று நோபல் பரிசு பெற்றவரும் பிரபல பொருளாதார அறிஞருமான அமர்த்தியா சென் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “ஊரடங்கு தேவையா இல்லையா என்பதை ஆட்சியா ளர்கள் பொதுமக்களுடன் விவாதித்திருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடத்தி யிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை, மாறாக ஒருதலைப்பட்சமாக ஊரடங்கை திணித்த னர். மக்கள் வீடு திரும்புவதை விரைவாக நிறுத்தி னர். பின்னர், அவர்கள் வாழ வருவாய் இல்லை. அன்றாட வருவாயை நம்பி வாழ்பவர்களுக்கு இது ஒரு பெருந்துயரமாக மாறியது” என்று சாடினார்.
“1957 தேர்தலுக்குப் பிறகுதான் கேரளாவில் கல்வி மற்றும் சுகாதாரத்தில் பொதுமக்கள் தலை யீடு நடந்தது. அந்த நேரத்தில் நடந்த ஒரு விவா தத்தை நான் நினைவு கூர்கிறேன். ஏழ்மையான இந்திய மாநிலங்களில் கேரளா மூன்றாவது பெரிய மாநிலம் என்றும், அனைவருக்கும் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்காக செலவழிக்கும் திறன் அதற்கு இல்லை என்பதும் ஒருதரப்பின் வாதம். மேலும், கேரளாவில் தொழிலாளர்களின் ஊதியம் குறைவாக இருந்தது. எனவே, கேரளம் செய்வது பொருளாதார ரீதியான தவறு என்கிற விவாதம் எழுந்தது. ஆனால் காலம் அவை அனைத்தையும் தவறென நிரூபித்துள்ளது. நீங்கள் எவ்வாறு பணத்தை ஒதுக்குகிறீர்கள் என்பது முக்கியம். படிப்படியாக கேரளா, நாட்டின் மிக உயர்ந்த தனிநபர் செலவு செய்யும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. தனிநபர் வருமா னமும் அதிகரித்துள்ளது” என்றார் அமர்த்தியா சென்.
கேரளம் சிறப்பாக தடுத்துள்ளது: சவுமியா சுவாமிநாதன்
கோவிட் தடுப்புக்குத் தேவையான முன்னேற் பாடுகளை விரைவாகச் செயல்படுத்துவதால் கேரளாவால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்தது என்று உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குநர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார். முன்னதாகவே ஆயத்தம் செய்துகொண்ட பகுதிகளில், கோவிட்டிலிருந்து மக்களை சிறப்பாக பாதுகாக்க முடிந்தது. ஜனவரி 30 அன்று, உலக சுகாதார அமைப்பு உலகளாவிய கோவிட் தடுப்புக்கான அவசர முன்னெச்ச ரிக்கையை வெளியிட்டது. அதனால்தான், வுஹானிலிருந்து வந்த முதல் நோயாளியை கண்டறிய கேரளத்தால் சாத்தியமானது என்றார்.